இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூர காணொளியை வெளியிட்ட தென்கொரிய ஜனாதிபதி
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung), இஸ்ரேலிய இராணுவத்தினர் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கும் வன்முறைகள் தொடர்பான காணொளியைப் பகிர்ந்தது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் இராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கபாடியா (Qabatiya) நகரில் இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் உடல்களைக் கட்டிடத்தின் கூரையிலிருந்து கீழே தள்ளும் அதிர்ச்சியூட்டும் காணொளியை ஜனாதிபதி லீ தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்திருந்தார்.
மனித நேயமற்ற செயல்
"இது உண்மையா என்பதை நான் ஆராய வேண்டும், அவ்வாறு இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அல்-ஜசீரா ஊடகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட இந்த காணொளியில், உடல்களைக் காலால் உதைத்துத் தள்ளும் கொடூரக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், மனித நேயமற்ற செயல் என்றும் பாலஸ்தீனிய வெளி விவகார அமைச்சகம் இஸ்ரேலைக் கடுமையாகச் சாடியுள்ளது.
우리는 이스라엘 외교부가 대통령께서 특정사안에 대한 의견이 아닌 보편적 인권에 대한 신념을 표명한 글의 의도를 잘못 이해하고 이를 반박한 것에 대해 유감스럽게 생각합니다.
— 대한민국 외교부 MOFA_KR (@mofa_kr) April 11, 2026
우리 정부는 이스라엘이 지적한 테러를 포함, 모든 형태의 폭력과 반인권적 행태를 단호히 반대하며, 국제인도법과…
இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலிய வெளி விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி லீ வேண்டுமென்றே 2024ஆம் ஆண்டு பழைய செய்தியைத் தோண்டி எடுத்து "இஸ்ரேலிய எதிர்ப்பு" செய்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அத்துமீறல்கள்
இருப்பினும், இதற்குப் பதிலளித்துள்ள தென் கொரிய ஜனாதிபதி, "உலகெங்கிலும் உள்ள மக்கள் அனுபவிக்கும் வலியை உணராமல், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து ஒருமுறை கூட சுயபரிசோதனை செய்யாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது" என்று இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தினர் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தும் அத்துமீறல்கள் குறித்துத் தொடரப்படும் வழக்குகளில் 88 சதவீத விசாரணைகள் எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இன்றி இஸ்ரேலால் முடித்து வைக்கப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சர்ச்சை வொஷிங்டன் உள்ளிட்ட சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam