தென் கொரிய ஜனாதிபதி அதிரடி கைது
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சியோலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இராணுவச் சட்டம் நடைமுறை
கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்வதற்காக புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போது அவர் கைது செய்யப்படும்போது, அவரது இல்லத்தின் முன்னால் மிக அதிகளவான ஆதரவாளர்கள் கூடி எதிர்ப்பு வெளியிட்டதாகவும், அதனையும் மீறி அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri