தென் கொரிய ஜனாதிபதி அதிரடி கைது
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சியோலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இராணுவச் சட்டம் நடைமுறை
கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்வதற்காக புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போது அவர் கைது செய்யப்படும்போது, அவரது இல்லத்தின் முன்னால் மிக அதிகளவான ஆதரவாளர்கள் கூடி எதிர்ப்பு வெளியிட்டதாகவும், அதனையும் மீறி அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri

இந்திய கடவுச்சீட்டு இருந்தால் மேலும் 6 நாடுகளிலிருந்து UAE-க்கு விசா இல்லாமல் நுழையலாம் News Lankasri

எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
