பாகிஸ்தானிய படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையில் மோதல்- எல்லையில் பதற்றம்!
பாகிஸ்தானிய படையினருக்கும் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகளுக்கும் இடையில் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிய எல்லைப்பகுதியில், பாகிஸ்தானிய படையினர், அத்துமீறி பிரவேசித்து தமது எல்லையை விரிவுப்படுத்தியதை அடு்த்தே இந்த மோதல் மூண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நிமோஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் இந்த வாரத்துக்குள் இரண்டாவது தடவையாக நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானிய படையினர் குறித்த பகுதியில் எல்லையை விரிவுப்படுத்தி அமைத்திருந்த வேலியை ஆப்கானிஸ்தான் தாலிபான் தீவிரவாதப்படையினர் நாசம் செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 22ஆம் திகதியும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இந்தநிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடரக்கூடாது என்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தொடர்பில் 1893ஆம் ஆண்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.











இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
