தென் அந்தமான், காற்றழுத்த தாக்கம்!இலங்கையின் வடக்கு கரையை நோக்கி நகர்வு
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேலும் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறி வியாழக்கிழமைக்குள் தென்மேற்கு வங்கக்கடலை வட தமிழக கடற்கரையை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்
இதன் தாக்கத்தின் காரணமாக, நாளை (07.12.2022) மற்றும் நாளை மறுநாள்(08.12.2022) வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல்
அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என
வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.