இந்திய அளவில் அதிகம் கேட்கப்படும் தமிழ்ப்பாடல்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள ஈழத் தமிழரின் பாடல்
ஈழத் தமிழரான ஷியமளாங்கன் இசையில் வெளியான ‘அன்பே’ இந்திய அளவில் spotifyஇல் அதிகம் கேட்கப்படும் தமிழ்ப்பாடல்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.
ஈர்ப்பான இசையையும் வசீகரமான வரிகளையும் கொண்ட இந்தப் பாடலில் பணியாற்றியது மகிழ்ச்சி தருகிறது என்று பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார் .
‘இசை அறிவு மிகுந்த இசையமைப்பாளரான ஷியாமளாங்கனோடு இணைந்து அழகான இந்தப் பாடலில் பணியாற்றியதையிட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று ஸ்ரீநிவாஸ் தனது முக நூல் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
சங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே முதலான முன்னணி இசைக்கலைஞர்களோடு இணைந்து வெற்றிப் படைப்புகள் பலவற்றைத் தந்தவர் ஷியாமளாங்கன்.
தற்போது வெளிவந்திருக்கும் ‘அன்பே’ பாடலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இலங்கையின் மிகப் பிரபலமான பாடல்களான ‘கிரி கோடு ஹிதட’, ‘பது பெம் பதும்’ முதலானவற்றுக்கு இசையமைத்தவர் ஷியாமளாங்கன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது தமிழகத்தில் வெளியாகும் படங்களுக்கும் வெப்தொடர்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
‘காதலின் எல்லாப் பரிமாணங்களையும் உணர்த்தும் உயிர்ப்புள்ள வரிகளை மதுரன் தமிழவேள் எழுதியிருக்கிறார்’ என்று பாடலாசிரியரையும் சிலாகித்துப் பேசியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ்.
சந்தம் தப்பாமல் இசையோடு இழையோடும் வரிகளைப் பாவலர் மதுரன் தமிழவேள் எழுதியிருக்கிறார்.
‘தரைமீது இருகால்கள் பதியாமல் அலைகின்றேன் – புவியீர்ப்பின் கணிதங்கள் பிழையானதே’ என்ற மதுரன் தமிழவேளின்(தவ சஜிதரன்) வரி இணையத்தில் பரவலாகப் பாராட்டப் பட்டு வருகிறது.
இலங்கைத் தமிழர்கள் மீது எனக்குத் தனிப் பாசம் உண்டு’ என்றும் பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
முக நூலில் கடந்த வாரம் வெளியிட்ட பதிவில் ‘நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்குத் தந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள், அவர்கள் மீது எனக்குத் தனிப்பிரியம் உண்டு’ என்று அவர் தெரிவித்துள்ளார்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021