அரசாங்கத்தின் சில கொள்கைகள் நகைச்சுவை வழங்குகிறது - சந்திம வீரக்கொடி
அரசாங்கத்தின் சில கொள்கைகள் எதிர்க்கட்சிக்கு நகைச்சுவை வழங்குவதாகவும் நாடு மீண்டும் 70-77 ஆம் தசாப்தத்தை நோக்கி செல்லும் விதத்தை காணக் கூடியதாக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சில கொள்கைகள் சமூக ஊடகங்களுக்கும் சிறந்த செய்திகளாக மாறியுள்ளன.70 ஆம் ஆண்டை நோக்கி நாடு செல்வது நல்லது என சிலர் நினைக்கின்றனர்.
அப்போது நாடு கடன் பெற்றிருக்கவில்லை. இதனால், நாட்டை நடத்திச் செல்ல முடிந்தது. எனினும் தற்போது அது கடினமானது. எல்ப்பிட்டியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் சந்திம வீரக்கொடி இதனை கூறியுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள சந்திம வீரக்கொடி, ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினராக இருந்த போதே அஜித் நிவாட் கப்ரால் முதலில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் எனக் கூறியுள்ளார்.
மத்திய வங்கி ஏனைய நிறுவனங்கள் பேபல் தனியார்மயப்படுத்தாத நிறுவனம். இதனால், கப்ரால் நாட்டின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்களை எடுக்க வேண்டுமே யன்றிஅரசியல் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கக் கூடாது எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.