ஆளும் கூட்டணியின் சில கட்சிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரி மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஆளும் கூட்டணியினால் நடாத்தப்பட்ட சந்திப்பில் பங்கேற்காத கட்சிகளே இன்றைய தினம் பிரதமரை சந்திக்க உள்ளன.
குறிப்பாக அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது.