சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றன! சஜித் குற்றச்சாட்டு
முதலாளித்துவ சிந்தனையுடனான ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இயங்கும் சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற, திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாளித்துவ சிந்தனையுடன் செயற்படுகின்றவர்கள் தனது பண அதிகாரத்தையும் வேறு அதிகாரங்களையும் பயன்படுத்தி ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
அத்துடன் நாட்டிலுள்ள 220 இலட்சம் பேரையும் தவறான வழியில் நடாத்திக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.