திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் சிலர் தற்கொலைக்கு முயற்சி!
தமிழ் நாட்டின் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகள் 15 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டும் வயிற்றைக் கத்தியால் கீறியும் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருச்சி சிறைச்சாலையில் உள்ள விசேட முகாமில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80ற்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள், கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக தமக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் உள்ளதால், தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தொடர் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
