இலங்கையின் 3D வரைபடத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தின் தாக்கம் காரணமாக இலங்கையின் 3D வரைபடத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று நில அளவையாளர் நாயகம் என்.கே.யு. ரோஹன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையை சுற்றி விண்வெளி நிலையங்களிலிருந்து செயற்கைக்கோள் படங்களைப் பெற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அடையாளம்
இந்த புதிய படங்கள், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும், நதிப் படுகைகள், நிலங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும் உதவும். "சேதம் பெரும்பாலும் புவியியல் நிலப்பரப்பில்தான் ஏற்பட்டுள்ளது.

வெளிப்புறப் பகுதிகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை, ஆனால் சில பகுதிகளில் மீள்குடியேற்றம் தேவைப்படலாம்," என்று ரோஹன கூறினார்.
செயற்கைக்கோள் படங்கள்
அனர்த்த நிலை சீரடைந்து, ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்தவுடன், விரிவான செயற்கைக்கோள் படங்களைப் பெறுவது ஒரு முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பெறுவதற்காக இராஜதந்திர வழிகள் மூலம் சர்வதேச உதவியையும் நில அளவை திணைக்களம் நாடியுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 18 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
நிலாவிற்காக கடும் வருத்ததில் சேரன், சோழன், நடேசன், என்ன ஆச்சு... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri