சிலர் மனித உரிமை ஆணைக்குழு செல்ல காத்திருக்கின்றனர்! - ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்
அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சிலர் காத்திருக்கின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கண்ணீர் புகைக் குண்டு அல்லது குண்டாந்தடிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலர் எப்படியாவது அரசாங்கத்திற்கு எதிரான மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவே காத்திருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களை தடுக்க பொலிஸார் தேவையின்றி தடைகளை ஏற்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டங்களை தடுத்த நிறுத்த பொலிஸார் முயற்சிக்கும்போதும் பிரச்சினைகள் எழும் என தெரிவித்துள்ளார். மேலும் சேதன பசளை பயன்படுத்தும் விவசாயிகளை அரசாங்கம் ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan