கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

M K Stalin Tamil nadu Sri Lanka Narendra Modi Kachchatheevu
By Indrajith Apr 03, 2025 03:48 PM GMT
Report

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு  கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்(M.K.Stalin) வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து பிணையில் செல்ல அனுமதி

கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து பிணையில் செல்ல அனுமதி

சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் 

பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக 02.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் | Solution Problem Recover Katchatheevu Stalin Modi

முன்னதாக, 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தமே, நீடிக்கும் இந்தப் பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கிறது.

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல்! கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டு

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல்! கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டு

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

1974-ம் ஆண்டில், கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டபோது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை கடுமையாக எதிர்த்தனர்.

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் | Solution Problem Recover Katchatheevu Stalin Modi

28.06.1974 அன்று மத்திய அரச, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக மறுநாளே, அதாவது 29.06.1974 அன்று, தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 03.10.1991, 03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் மூவர் கைது

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் மூவர் கைது

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள், கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021 ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் | Solution Problem Recover Katchatheevu Stalin Modi

இதேவேளை 2024 ஆம் ஆண்டில், 530 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதேநேரம், 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 147 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது; அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகின்றன.

 நிரந்தரத் தீர்வு 

இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இந்திய கடற்றொழிலாளர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் | Solution Problem Recover Katchatheevu Stalin Modi

எனவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பது மாத்திரமே என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US