வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர்
வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளை விட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின் வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி எதிர்வரும் வாரங்களில் வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி சரியான தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்,
தொல்லியல் திணைக்களத்தினால் இடையூறு
வெடுக்குநாறிமலையை 2018 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தியிருந்தது. ஆனாலும் இதுவரை அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை.
2019 ஆம் ஆண்டிலிருந்து வெடுக்குநாறி மலையில் அமைந்திருக்கும்
புராதன ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுக்கு தொல்லியல்
திணைக்களத்தினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே 2020 ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் பொது மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தவிதமான தடை உத்தரவுகளையும் பிறப்பிக்காத நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
இது தொடர்பாக சட்டமா அதிபர் தரப்புக்களுடன் கலந்துரையாடிய போது வழக்கின் கோவை இன்னும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், கிடைத்தவுடன் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
வெடுக்குநாறி விவகாரத்தில் நீதிமன்றம் எந்த விதமான தடை உத்தரவுகளையும் வழங்காத போதிலும், வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, உடைக்கப்பட்ட சிலைகளை மீளப் பிரதிஸ்டை செய்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
ஜனாதிபதி வழங்கிய உறுதி
அதேவேளை, குருந்தூர் மலையில் விகாரை அமைப்பதற்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்திருக்கின்ற நிலையிலும் விகாரை கட்டி முடிக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களை மாத்திரமல்ல, நியாயமாகவும், நடுநிலையாகவும் சிந்திக்கும் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தும். இன்றைய அமைச்சரவையில் கூட உண்மை மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் விவாதத்திற்கு வந்திருக்கிறது. இவையெல்லாம் அர்த்த பூர்வமானவையா என்ற எண்ணத்தினை நடக்கின்ற சம்பவங்கள் தோற்றுவிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மீண்டும் குறுக்கிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் அதில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துக்கொள்வதாகவும், எதிர்வரும் வாரங்களில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி சரியான தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் பதிலளித்துள்ளார்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 1 மணி நேரம் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
