களுத்துறையில் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர்
களுத்துறை - ஹொரணை பகுதியில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலுள்ள சிறிய குளத்திலிருந்து இன்று (29.01.2024) இராணுவ வீரரின் சடலத்தை அங்குருவத்தோட்ட பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்த இராணுவ வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இராணுவ முகாமில் நடைபெற்ற உடற் பயிற்சியின் போது கலந்து கொள்ளவில்லை எனவும் தேடப்பட்ட போதும் அவர் காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இராணுவ வீரரின் வீட்டாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
