கிளிநொச்சியில் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பம்
சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி நேற்றைய தினம் (15) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளிடம் இருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் குறித்த சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பூநகரி கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட செம்மன்குன்று பகுதியிலேயே இந்த பணி ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.
முன்னெடுக்கப்படும் பகுதிகள்
இந்த திட்டமிடமானது, வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகிறது.
கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் அதற்குள் அடங்குகின்றன.
மேலும், இந்த நிகழ்வில், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 21 மணி நேரம் முன்

பணியின் போது மரணமடைந்த இந்திய வம்சாவளி மைக்ரோசாப்ட் பொறியாளர்: குடும்பத்தினர் எச்சரிக்கை News Lankasri

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri
