சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹன்துன்கொட கைது
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹன்துன்கொட கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றிரவு(05.02.2023) ஹன்துன்கொடவை கைது செய்துள்ளனர்.
வெளிநாடு ஒன்றுக்கு சென்று நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தர்ஷன ஹன்துன்கொட யூடியூப் அலைவரிசையில் அரசியல்வாதிகள் பலரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் சமகாலத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் தனது கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.