கிண்ணியா பிரதேச ஆசிரியர் இடமாற்றத்தில் சமூக நீதி பேணப்படவில்லை: ஆசிரியர்கள் புகார்

Covid Schools Teachers Kinniya
By Mubarak Feb 14, 2022 09:30 AM GMT
Report

கடந்த காலங்களில் கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் சமூக நீதி பேணப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஒரே பாடசாலையில் எட்டு வருடங்கள் ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

விண்ணப்பப் படிவங்கள், வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே பாடசாலையில் எட்டு வருடங்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள், குறித்த பாடசாலை அதிபர் ஊடாக திகதிக்கு முன்னர் அவற்றைப் பூர்த்தி செய்து வலயக்கல்வி பணிமனைக்குச் சமர்ப்பிக்குமாறு வலயக்கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் சமூக நீதி பேணப்படவில்லை எனவும், அரசியல், கட்சி, நட்பு, பதவி நிலை மற்றும் உறவுமுறை போன்ற விடயங்கள் ஆதிக்கம் செலுத்தியதாகவும் இதனால் ஆசிரியர் இடமாற்றத்தில் பாடசாலை தேவைகள் கருத்திற் கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

தங்களது வீட்டுக்கருகில் நகர்ப்புறப் பாடசாலையில் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றிய ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது, இவர்கள் அரசியல்வாதிகளைக் கூஜா பிடித்து ஓரிரு தினங்களில் மீண்டும் அதே பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றமையை இவர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

அதேபோல் கடந்த காலங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர், தனது உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் இடமாற்றத்தைப் பாதுகாப்பதற்காகவும் , அவர்களை விரும்பிய பாடசாலைகளுக்குக் கொண்டு வருவதற்காகவும் ஒரே பாடசாலையில் எட்டு வருடங்கள் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் கூட அதி கஷ்டப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விடயத்தில் பாடசாலைத் தேவையோ, மேலதிக ஆசிரியர்களைச் சமப்படுத்தும் கொள்கையோ கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில், ஆசிரியர் இடமாற்றத்தில் அநீதி இழைக்கப்பட்டோர் மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும், ஆசிரியர் இடமாற்ற சபையின் விதிமுறையை மீறி , அந்த மேன்முறையீட்டுச் சபையில் வலய கல்விப் பணிப்பாளர் பிரசன்னமாகி இருந்தமை இடமாற்ற சபையின் சுயாதீன செயற்பாடுகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேசிய ரீதியில் கிண்ணியாவின் கல்வி வளர்ச்சி தொடர்ந்து கடைசி நிலையில் இருப்பதற்குப் பாடசாலை தேவை கருதி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படாமையும் ஆசிரியர் வளங்கள் சமமாகப் பகிரப்படாமையும் ஒரு முக்கிய காரணம் என புத்திஜீவிகளும் சமூக அமைப்புக்களும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

எனவே, கோவிட் அனர்த்த சூழ்நிலை காரணமாகக் கடந்த இரண்டு வருடங்கள் கிண்ணியா கல்வி வலயத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வருடாந்த இடமாற்றத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

புதிய வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில், மேற்கொள்ளப்பட இருக்கின்ற இந்த இடமாற்றங்களில் சமூக நீதி பேணப்பட வேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US