ஜனாதிபதியின் சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கல் பற்றி கேள்வி எழுப்பிய சோபித தேரர்: செய்திகளின் தொகுப்பு
சர்வகட்சி அரசாங்கம் என்ற யோசனையை தவறாக பயன்படுத்துவதன் மூலம், ஜனாதிபதி அதனை நசுக்க முற்படுகின்றாரா என சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பேரவையின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தை அமைக்குமாறு கட்சிகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மாற்றத்தை கோரும் குழுக்களுக்கு எதிராக, கடுமையான மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதென சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாகப் பதவியேற்குமாறு பொதுமக்கள் கோரவில்லை. எனினும் அரசியலமைப்பு என்ற போர்வையில் எப்படியாவது அதிகாரத்தை பிடிப்பதையே ஜனாதிபதி விரும்புவதாக ஓமல்பே சோபித தேரர், குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை தேர்தலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 3 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

6 வயது பிரித்தானிய சிறுவனின் சூட்கேஸில் மர்ம பொருள்: விமான நிலையத்தில் நடந்த தேடுதல் வேட்டை News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
