கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசிப் பெற்றுக் கொண்ட இளையோர் விபரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இருபது வயது முதல் முப்பது வயதிற்குட்பட்ட இருபத்தி எட்டாயிரத்து 482 பேர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளத் தகுதியுடைய நிலையில் கடந்த மூன்று நாட்களில் 745 பேர் மாத்திரமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 30 வயது பிரிவினருக்குத் தடுப்பூசி ஏற்றும் பணி கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20 - 30 வயது பிரிவினர் 28482 பேர் உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த 20ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் ஆதார வைத்தியசாலை, பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் கடந்த 21ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை, அக்கராயன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், முழங்காவில் ஆதார வைத்தியசாலை, தர்மபுரம் மத்திய கல்லூரி, பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருபத்தி எட்டாயிரத்து 482 பேர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளத் தகுதியுடைய நிலையில் கடந்த மூன்று நாட்களில் 745 பேர் மாத்திரமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.