கல்குடாவுக்கு கேரள கஞ்சா கடத்தி வந்த நபர் மடக்கிப்பிடிப்பு! (Photos)
பொலன்னறுவையிலிருந்து கல்குடாவுக்கு கேரள கஞ்சாவைக் கடத்தி வந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (24.11.2022) அதிகாலை 5 மணியளவில் ஜெயந்தியா பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் நிறையுடைய இரு கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்ச்சியாக கேரளா கஞ்சாவினை கல்குடாவுக்கு கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதுடன், பிரதான விநியோகத்தராகவும் செயற்பட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புலனாய்வுப்பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்ற நடவடிக்கைக்காக முற்படுத்தப்படவுள்ளார்.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam