தமிழரசுக் கட்சி வழக்கு தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட வேண்டும்: கே.வி.தவராசா
தமிழரசுக் கட்சி (Ilankai Tamil Arasu Kachchi) தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று (19.05.2024) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சுமூகமாக முடிவு
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை நீதிமன்றில் உள்ள வழக்கை முதல் திகதியிலேயே முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயற்ப்பட்டோம்.
இது ஒரு பொதுநல வழக்கு. தற்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இறுதியாக நாம் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம். வழக்காளியின் சட்டத்தரணிகளுடனும், வழக்காளியுடனும் பேசி இந்த விடயத்தினை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வந்து வழக்கை முடிவுறுத்துவதற்கான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் பொதுக்குழுவினை கூடி சுமூகமாக முடிவு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது செயற்பாடுகள் அமைந்தன என்று தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனும்இ கே.தவராசாவும் மத்தியகுழுவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam