அமெரிக்காவின் மற்றுமொரு தளத்தை இலக்கு வைத்த ஈரான்! குவைத்தில் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அல்லது அதற்கு அருகில் இருந்து புகை எழுவதைக் காண முடிந்தது என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
குறித்த பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காணப்பட்டதாகவும் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கட்டிடம் அருகே புகை வந்ததை அடுத்து, தூதரகத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், மக்கள் தூதரகத்திற்கு வருவதைத் தவிர்க்கவும், வீட்டிலேயே தஞ்சமடையவும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், "கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த தளத்தில் உள்ள உங்கள் வீட்டில் பதுங்கிக் கொள்ளுங்கள், ஜன்னல்களிலிருந்து விலகி இருங்கள். வெளியே செல்ல வேண்டாம்.
குவைத்தில் உள்ள அமெரிக்க குடிமக்கள், தங்குமிடம், தாக்குதல் ஏற்பட்டால் பாதுகாப்புத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுங்கள் மற்றும் எதிர்காலத்தில் கூடுதல் தாக்குதல்கள் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்" என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.
இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கை: லெபனானிலிருந்து அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள் - ஆரம்பித்துள்ள தாக்குதல்
You may like this..
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri