ஜனாதிபதி பங்கேற்புடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிகழ்வு
ஸ்ரீ தலதா வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வில்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார்.
ஸ்ரீ தலதா வழிபாடு
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஸ்ரீ தலதா வழிபாடு, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள எதிர்பார்ப்பதோடு, அவர்கள் கொழும்பிலிருந்து சிறப்பு தொடருந்து மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேர விபரங்கள்
ஸ்ரீ தலதா வழிபாடு, இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.
ஆரம்ப நாளான இன்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.
