அரச பேருந்தை நிறுத்தி்ச்சென்ற சாரதிக்கு அதிகாலை காத்திருந்த அதிர்ச்சி
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடத்திச்செல்லப்பட்டுள்ளது.
இன்று (25) காலை அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டு, தியதலாவ, வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட அரச பேருந்து
கடத்தப்பட்ட பேருந்து, மாத்தறைக்கும், பண்டாரவளைக்கும் இடையில் இயங்கும் வெல்லவாய டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஆகும்.
மாத்தறையிலிருந்து, பண்டாரவளைக்கு வந்த பேருந்து, இரவு முழுவதும் வழக்கம் போல் பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
சாரதி இன்று காலை 6.45 மணிக்கு மீண்டும் தனது பயணத்தை தொடங்க மாத்தறைக்கு திரும்பியபோது பேருந்து காணாமல்போயிருப்பது அவதானிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, தியதலாவ, வெலிஹெலகம பகுதியில் வீதியோரத்தில் பேருந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தை கடத்தியவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை, மேலும் சம்பவம் குறித்து பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam