திடீரென மாற்றப்பட்ட மொட்டு கட்சியின் தலைவர்! எழுந்துள்ள புதிய சர்ச்சை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டம் சட்டப்பூர்வமானது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(24.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சாகர கொடுத்த விளக்கம்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“பொதுச்சபை கூட்டம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. கட்சியின் தவிசாளராக இருந்த பீரிசுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
உரிய நடைமுறைகளை பின்பற்றியே கூட்டம் நடத்தப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம்(22.04.2023) நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
இதனால் அன்றைய கூட்டம் கட்சி தலைவர் இன்றி நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர், அக்கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் உதுராவல தம்மரதன தேரர் கட்சியின் தலைவராக ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி கூட்டத்தில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை
இது தொடர்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கையில்,கட்சியின் யாப்புக்கு அமைய இவ்வாறான பொதுக் கூட்டத்தை நடத்துவது சட்ட ரீதியான விடயம் இல்லை.
எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
