மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

Srilanka Freedom Party Chandrika Kumaratunga Maithripala Sirisena
By Mayuri Apr 04, 2024 08:51 AM GMT
Report

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார்நாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையில் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனு தாக்கல்

கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணான வகையில் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டார் என தெரிவித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான காலப்பகுதியில் பாரிய பின்னடைவை சந்தித்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

slfp-big-blow-for-maithripala-from-cbk-s-case

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பல்வேறு கட்சி பூசல்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சந்திரிகா தரப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தற்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் திரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சை கருத்து

கொழும்பு டார்லி வீதியில் இந்த தலைமையகம் அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தற்கொலை கொண்டு தாக்குதல் தொடர்பில் அண்மையில் சர்ச்சை கருத்தினை வெளியிட்டு இருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதனை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இந்த தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மைத்திரி, கட்சியின் தலைமை பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என சந்திரிக்கா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

slfp-big-blow-for-maithripala-from-cbk-s-case

கட்சியின் தலைமை பதவியை தொடர்ச்சியாக வகித்து வருவது கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கட்சியின் தலைவராக பதவி வகித்த மைத்திரி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் கட்சியின் போஷகராக பதவி வகிக்க வேண்டும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம்

எனினும் கட்சியாப்பின் விதிகளை மீறும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்தும் கட்சியின் தலைமை பதவியில் நீடித்து வருவதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க தாக்கல் செய்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்சியின் போஷகர் மற்றும் கட்சியின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் ஒரே நேரத்தில் வகிப்பது பொருத்தமற்றது என சந்திரிக்காவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதேவேளை, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரத்தி துஷ்மந்த மித்ரபால, கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் நிமால் சிரிபால டி சில்வா, துணைத்தலைவர் ஃபைசர் முஸ்தபா ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

slfp-big-blow-for-maithripala-from-cbk-s-case

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மற்றும் 52 நாள் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக பதவியில் அமர்த்தியமை போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்த விடயங்களை சட்டத்தரணிகள் நீதிமன்றில் இன்று சுட்டிக்காட்டி இருந்தனர்.

சந்திரிக்காவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சந்தக ஜயசூரிய, அமில திஸாநாயக்க, பூர்ணிமா ரட்நாயக்க மற்றும் எம்.எஸ்.ஆர். பெரேரா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான உத்தரவினை கொழும்பு மாவட்ட நீதவான் சந்துன் வித்தான பிறப்பித்திருந்தார். மைத்திரிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் தலைமையகத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது. மைத்திரியுடன் முரண்பட்டிருந்த சில கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18ஆம் திகதி வரை தடையுத்தரவு

அண்டவெளியில் ஏற்படும் அபூர்வ நிகழ்வை காண இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

அண்டவெளியில் ஏற்படும் அபூர்வ நிகழ்வை காண இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைவர் பதவியில் தொடர்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    

slfp-big-blow-for-maithripala-from-cbk-s-case

மேலும் இந்த உத்தரவு ஏப்ரல் 18ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் சிக்கிய மர்மபொருள்: விசாரணையில் சிக்கிய மூவர்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் சிக்கிய மர்மபொருள்: விசாரணையில் சிக்கிய மூவர்

98,000 கோடி ரூபாய் வரிப்பணத்தை வசூலிக்க முடியாத நிலையில் அரசாங்கம்

98,000 கோடி ரூபாய் வரிப்பணத்தை வசூலிக்க முடியாத நிலையில் அரசாங்கம்

முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய வண்ண மற்றும் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

கட்சித் தலைமையகத்தில் கடந்த 30.3.2024அன்று செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடியாக நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்ட நடவடிக்கை எடுக்கும் அமைச்சர்

அதிரடியாக நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்ட நடவடிக்கை எடுக்கும் அமைச்சர்

அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேபோல், அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தை நாட ஆயத்தம்

இதனை தொடரந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் (Mahinda Amaraweera) மகிந்த அமரவீர, பொருளாளர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) ஆகியோர் கூறியிருந்தனர். 

சுதந்திரக் கட்சியில் நீடிக்கும் முறுகல் : நீதிமன்றத்தை நாடும் உறுப்பினர்கள்

சுதந்திரக் கட்சியில் நீடிக்கும் முறுகல் : நீதிமன்றத்தை நாடும் உறுப்பினர்கள்

இவ்வாறான முறுகல் நிலை கட்சிக்குள் தொடரும் நிலையில் தற்போது தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமையானது கட்சிக்குள் ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மிக நெருங்கிய பிணைப்பை கொண்டுள்ள சந்திரிக்கா சுதந்திரக் கட்சி தொடர்பான விடயத்தில் மும்முரம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US