பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos)

srilanka Human rights council PTA M.M.Suhair
By Amal Feb 05, 2022 05:26 AM GMT
Report

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்களில், கடுமையான விதிகள் அகற்றப்படவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos) | Slams On Pta By M M Suhair

எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிப்பதற்காக இந்த திருத்தங்களை இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

எனினும் இந்த திருத்தங்களை முற்றாக நிராகரித்துள்ள சர்வதேச அறங்கூறுநர் சபை, பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என்று கோரியுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மனித உரிமைகள் விடயத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட துடிப்பதாக சர்வதேச அறங்கூறுநர் சபையின் சட்டக்கொள்கை பணிப்பாளர் இயன் சீட்ர்மேன் குற்றம் சுமத்தியிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos) | Slams On Pta By M M Suhair

(“The Government of Sri Lanka is once again scrambling to do its bare minimum ahead of another UN Human Rights Council session, in an attempt to deflect focus away from its failing human rights record,” said Ian Seiderman, ICJ’s Legal and Policy Director)

இந்தநிலையில் தமது கருத்தை வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர், சட்டத்தின் காலக்கெடுவையும் மீறி, சந்தேகத்துக்குரியவர்கள், காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளபோது, விசாரணையை தொடர்ந்தும் அனுமதிப்பது அநீதிகளுக்கு வழியை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்குமூலங்கள் சில சமயங்களில் நீதிவான்களாலும், காவல்துறையின் உயரதிகாரியாலும் பெறப்பட்டாலும், சந்தேகத்துக்குரியவர்களின் உடல் பாதுகாப்பு, காவல்துறையின் பிரத்யேக கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இது காவல்துறையினர் எதிர்பார்த்தப்படி, சந்தேகத்துக்குரியவர்களின் சாட்சியங்கள் அமையாதுபோனால், தொடர்ந்தும் அவர்கள் காவல்துறையினரால் பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தத்தின்படி, மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், விசாரணைகயை ஆரம்பிக்கவில்லை என்றால், சந்தேகத்துக்குரியவர்களுக்கு பிணை வழங்கமுடியும்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய அதிகாரங்கள் கூட மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுஹைர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos) | Slams On Pta By M M Suhair

இலங்கை அரசாங்கத்தினால், முன்மொழியப்பட்ட சட்டத்தின் நோக்கம் சிறுபான்மையினருக்கு எதிராக, தொடர்ந்து ஆயுதமாக்குவதாக இருந்தால்,அது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் எதிர்ப்புக்களை உருவாக்கும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos) | Slams On Pta By M M Suhair

அத்துடன் மனித உரிமை மீறல்களுக்கு இடம்தரப்படாது என்று அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கும் முரண்பட்டதாக அமையும் என்று சுஹைர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Gallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US