இலங்கை அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் நீக்கம்
உலக கிண்ண தொடரின் அடுத்து நடக்கவிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் உபாதைக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் தசுன் சானக்க உபாதைக்கு உள்ளாகிய நிலையில் அவருக்கு பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் சாமிக்க கருணாரத்ன அணியில் இணைத்துக்கொள்ளபப்பட உள்ளார்.
மூன்று வாரங்களுக்கு இல்லை
இந்நிலையில் சாமிக்க கருணாரத்னவை அணியில் இணைத்து கொள்வற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சர்வதேச கிரிக்கட் பேரவயைின் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளது.
உபாதை காரணமாக லக்னோவில் இன்று நடைபெற்ற பயிற்சியிலும் தசுன் ஷானக மற்றும் மதீஷாவும் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உபாதை காரணமாக தசுன் ஷானகவால் மூன்று வாரங்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய தசுன் சானக்க உலகக் கிண்ண குழாமிருந்து விலகி நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.
மேலும், எஞ்சிய போட்டிகளில் இலங்கை அணியை குசால் மெண்டிஸ் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam