உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - பிரித்தானியாவின் உதவியை நாடும் இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்க பிரித்தானியாவிடம் இலங்கை உதவி கோர உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையால் பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் முழுமையடையாத காரணத்தினால், பிரித்தானிய அரசாங்கம் மற்றும் அவர்களின் புலனாய்வுப் பிரிவினரின் உதவியைக் கோரவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
21 ஏப்ரல் 2019, ஈஸ்டர் ஞாயிறு அன்று, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று சொகுசு ஹோட்டல்கள், தொடர்ச்சியான ஒருங்கிணைந்த இஸ்லாமிய பயங்கரவாத தற்கொலை குண்டுவெடிப்புகளுக்கு இலக்காகின.
269 பேர் பரிதாபமாக பலி
அத்துடன், அன்றைய தினம், தெமட்டகொடையில் உள்ள வீட்டுத் தொகுதியிலும், தெஹிவளையில் உள்ள விருந்தினர் மாளிகையிலும் சிறிய அளவிலான வெடிப்புகள் நிகழ்ந்தன.
குறைந்தது 45 வெளிநாட்டினர், மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் எட்டு குண்டுவீச்சுக்காரர்கள் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.
நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் கொழும்பில் உயிரித்த ஞாயிறு ஆராதனைகளின் போது தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அத்துடன், ஷங்ரி-லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் டிராபிகல் இன் ஆகிய ஹோட்டல்கள் குண்டுவெடிப்புக்குள்ளாகின.
புலனாய்வு சேவையின் கூற்றுப்படி, இரண்டாவது தாக்குதல்கள் திட்டமிடப்பட்டதாகவும், எனினும், அரசாங்க சோதனைகளின் விளைவாக அந்த தாக்குதல் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு தற்கொலை குண்டுதாரிகளும் வெளிநாட்டு உறவுகளைக் கொண்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் போராளி இஸ்லாமியக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் உடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகள் என இலங்கை அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 6 நிமிடங்கள் முன்

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam
