ரி-20 வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இலங்கை அணி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது ரி20 போட்டி பல்லகெலேவில் நேற்று (30) நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களையே பெற்றது.
சூப்பர் ஓவர்
இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில் குறித்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் இலங்கை அணி சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
மோசமான சாதனை
அதாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை எதிர்கொண்ட அணிகளில் இலங்கை - 105 தோல்வி, பங்களாதேஷ்- 104 தோல்வி, மேற்கிந்திய தீவுகள் - 101 தோல்வி மற்றும் சிம்பாப்வே - 99 போட்டிகளில் தோல்வியும் நியூசிலாந்து - 99 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.
|
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri