இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி : உயிருடன் இருப்பதாக தெரிவித்து சென்னை நீதிமன்றில் மேன்முறையீடு

Sri Lanka Refugees India Law and Order
By Sivaa Mayuri Jun 13, 2024 06:01 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி ஒருவர், உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றுமாறும் சென்னை மேல்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

குறித்த அகதியின் மாமி முறையான உறவினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக காந்தன் என்ற கே. கிருஸ்ணக்குமார், இறந்துவிட்டதாகவும் எனவே அவர் இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையகம் அறிவித்திருந்தது.

இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி : உயிருடன் இருப்பதாக தெரிவித்து சென்னை நீதிமன்றில் மேன்முறையீடு | Sl Refugee Appeal Court Stating That He Alive

எனினும் கிருஸ்ணக்குமார் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றவேண்டும் என்றும் அவரின் மாமியார் சென்னை மேல்நீதிமன்றில் மேன்முறையீட்டை செய்துள்ளார்.

2015 இல் கைது

மனுதாரரான 63வயதான டி.நாகேஸ்வரி,தானும் தனது குடும்பத்தினரும் 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததாகவும் அன்றிலிருந்து மதுரை முகாமில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நிதியமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்

இந்தியாவின் நிதியமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்


தமது மருமகன் கிருஸ்ணகுமார், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2015 இல் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் ராமநாதபுரத்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு 2018 இல் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது,

பின்னர் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர் சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, 2022 ஜூலை முதலாம் திகதியன்று அவரை விடுவித்தது

எனினும் அன்றிலிருந்து திருச்சியின் முதல்வர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி : உயிருடன் இருப்பதாக தெரிவித்து சென்னை நீதிமன்றில் மேன்முறையீடு | Sl Refugee Appeal Court Stating That He Alive

இந்தநிலையில் மதுரை சிறப்பு முகாமில் தன்னுடன், அவரை தங்க அனுமதிக்கக் கோரி அவர் அளித்த பல முறைப்பாடுகள் இன்றுவரை பரிசீலிக்கப்படவில்லை

இதனையடுத்து தமது மருமகனான கிருஸ்ணகுமார், தம்மை தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்க அனுமதி கோரி 2023 ஜூலை 12 அன்று முதல்வரின் சிறப்புப் பிரிவிடம் கோரியிருந்தார்.

திருச்சியில் இருந்து மதுரை சிறப்பு முகாமுக்கு மாற்ற கோரிக்கை

முதல்வரின் சிறப்புப் பிரிவு, தேவையான நடவடிக்கைக்காக 2023 ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையகத்துக்கு அந்த கோரிக்கையை அனுப்பியது.

இதன்போது, விண்ணப்பதாரர் காந்தன் என்கிற கிருஸ்ணகுமார் இறந்துவிட்டதால், அவரது பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆணையகம் அறிவித்திருந்தது.

அமெரிக்காவிற்கு எதிராக மிக நுட்பமாக இலங்கையை நகர்த்திய முக்கிய நாடு

அமெரிக்காவிற்கு எதிராக மிக நுட்பமாக இலங்கையை நகர்த்திய முக்கிய நாடு


எவ்வாறாயினும், தனது மருமகன் உயிருடன் இருப்பதாக மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்

தாமே ஆணையாளரிடம் இருந்து தகவல்தொடர்புகளைப் பெற்றதாகக் கூறிய மனுதாரர், அதிகாரிகள் உண்மைகளை சரியாக சரிபார்க்கத் தவறிவிட்டனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே தமது மருமகனை திருச்சியில் இருந்து மதுரை சிறப்பு முகாமுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US