இலங்கையில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி
இலங்கையில் பொலிஸார் கையடக்க தொலைபேசிக்கான புதிய செயலியொன்றை (App) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் இடம்பெறும் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்கும் வகையில் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
‘etraffic’ என்ற செயலியே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை Android பயனர்கள் Google Playstore இலிருந்து தரவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அன்றாடம் சந்திக்கும் போக்குவரத்து விதி மீறல் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து குறித்த செயலி மூலம் நேரடியாக பொலிஸாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள - https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice





பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam