இலங்கையில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி
இலங்கையில் பொலிஸார் கையடக்க தொலைபேசிக்கான புதிய செயலியொன்றை (App) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் இடம்பெறும் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்கும் வகையில் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
‘etraffic’ என்ற செயலியே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை Android பயனர்கள் Google Playstore இலிருந்து தரவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அன்றாடம் சந்திக்கும் போக்குவரத்து விதி மீறல் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து குறித்த செயலி மூலம் நேரடியாக பொலிஸாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள - https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice





இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...