நாட்டின் அடுத்த கணக்காய்வாளர்: ஜனாதிபதியின் மற்றொரு பரிந்துரையும் நிராகரிப்பு
நாட்டின் அடுத்த கணக்காய்வாளர் நாயகமாகப் பொறுப்பேற்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த மற்றொரு வேட்பாளரை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
ஓ.ஆர். ராஜசிங்க என்பவரின் பெயரை அரசியலமைப்பு பேரவை நிராகரித்ததன் மூலம், கடந்த எட்டு மாதங்களில் நிரந்தர அல்லது செயல் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்ற ஜனாதிபதி சமர்ப்பித்த நான்கு பேர் பேரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்தத் துறையில் தற்காலிக கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பணிகளில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
கணக்காய்வாளர்
இறுதியாக பரிந்துரைக்கப்பட்ட ராஜசிங்க இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரி மற்றும் இராணுவத்தின் கணக்காய்வுப் பிரிவின் உறுப்பினர் ஆவார்.
கடந்த புதன்கிழமை(17) நடைபெற்ற பேரவையின் அமர்வின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய அவரது பெயரை மத்திய சபைக்கு சமர்ப்பித்திருந்தார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற மத்திய சபைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் வேட்பாளருக்கு ஆதரவாக நான்கு உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். ஐந்து பேர் எதிராக வாக்களித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஆகியோருடன் மூன்று சிவில் சமூக உறுப்பினர்களும் வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தனர்.
பரிந்துரை நிராகரிப்பு
பிரதமர் அமரசூரிய மற்றும் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஆதம்பாவா மற்றும் எஸ். சிறீதரன் ஆகியோர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் கணக்காய்வு அதிகாரியாக இருந்த எச்.டி.பி. சந்தனவின் பெயரை ஜனாதிபதி முதலில் பரிந்துரைத்தார்.

ஆனால் மத்திய குழு அவரது வேட்புமனுவை நிராகரித்தது. இதன் விளைவாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அடுத்த மூத்த அதிகாரியான தர்மபால கம்மன்பில, பதில் கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டார்.
எனினும் ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது பதவிக்காலத்தை நீடிக்கும் நடவடிக்கையை மத்திய குழு நிராகரித்தது.
இதனையடுத்து மூத்த துணை கணக்காய்வாளராக பணியாற்ற எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் அவரது பெயரும் அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டது.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam