பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்
அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார நேற்றையதினம் (22.01.2024) நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்துமபண்டார,
“உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்கட்சிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கும்.
மேலும், இந்த சட்டமூலம் நாட்டில் பயங்கரவாதம் நிலவாத ஒரு காலப்பகுதியிலும் தேர்தல் காலப்பகுதியிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை
இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்று தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்பதோடு குறித்த சட்டமூலத்தை பயன்படுத்தி எவரையும் கைது செய்யவும் முடியும்.

அத்துடன், தேர்தல் நேரத்தில் கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவும் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்காகவும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan