சீன வீரர்கள் பங்கேற்கும் மரதன் ஓட்டத்தை நடாத்தவுள்ள இலங்கை
சீன விளையாட்டு வீரர்கள் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் சீன மரதன் ஓட்டத்தை இலங்கை நடத்தவுள்ளது.
ஏதிர்வரும் மே மாதத்தில் இந்த மரதன் ஓட்டம் நடத்தப்படும் என்று இலங்கை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் சிரந்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
பீரிஸ் அண்மையில் சீனாவில் உள்ள சோங்கிங் (Chongqing) நகரசபைக்கு விஜயம் செய்து, அடுத்த இரண்டு வருட காலப்பகுதியில் அதிகமான சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான உடன்படிக்கையை மேற்கொண்டார்.
உணவு திருவிழா
அதன்படியே இந்த ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை சீன நாட்டவருக்கான மரதன் ஓட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து உன்வட்டுன கடற்கரைப் பகுதியில் கடல் உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது.
இதனை வருடாந்த நிகழ்வாக மாற்றுவதற்கான திட்டமும் உள்ளதாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் Ni Hao Zhong Guo திட்டத்தின் படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்பதோடு இதன் காரணமாக இலங்கைக்கு 225 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
