இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியதா! விளக்கும் நிபுணர்
ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தின் போது இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்பட்டதாக சட்ட வல்லுனரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை கையாண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் எந்த ஒரு தரப்பினரும் அல்லது எந்த ஒரு நாடும் இலங்கை மீது அழுத்தம் செலுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்க 1949 ஆம் ஆண்டு ஜெனீவா இரண்டாம் பிரகடனத்தில் கையொப்பமிட்டு அங்கீகரிக்கப்பட்ட நாடு என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கப்பல் ஒன்று மூழ்கும் போது மோதலினால் அவ்வாறு கப்பல் மூழ்கினாலும் கப்பலில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்க வேண்டியது அவசியமானது எனவும் அதுவே சர்வதேச சட்டமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை இந்த போரில் பங்கெடுக்கவில்லை என்றாலும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். போரில் கப்பலில் சிக்கியிருந்த நபர்களை பாதுகாக்கும் அல்லது மீட்கும் சட்ட ரீதியான பொறுப்பு இலங்கைக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த மனிதாபிமான செயல்பாட்டை எவராலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
ஈரான் கப்பல் தாக்குதலுக்கு இலக்கான சந்தர்ப்பத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பில் எவரேனும் விமர்சனங்கள் முன் வைத்தால் அவர்களுக்கு சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச சமுத்திர சட்டம் என்பன தொடர்பில் எந்த விதமான அறிவும் கிடையாது என்று அர்த்தம் என பேராசிரியர் பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan