புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பை பெற இலங்கை அரசாங்கத்திற்கு அருட்தந்தை சத்திவேல் வழங்கும் ஆலோசனை

Rajiv Gandhi Sri Lanka Government Of Sri Lanka Government Of India
By Shan Nov 12, 2022 04:49 AM GMT
Report

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (12.11.2022) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 30 வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்திருப்பதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்று பாராட்டுகின்றது.

இவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்ட தமிழக அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது.

புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பை பெற இலங்கை அரசாங்கத்திற்கு அருட்தந்தை சத்திவேல் வழங்கும் ஆலோசனை | Sl Government Should Release Political Prisoner

இந்த வழக்கின் தீர்ப்பை முன் மாதிரியாக கொண்டேனும் இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 12,000 முன்னாள் போராளிகள் சமூக மயமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே நன்நடத்தையாளர்களாக அடையாளம் காணப்பட்டு இவர்கள் சமூகமயமாக்கப்பட்டனர்.

தொடர்ந்து அரசியல் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொலை செய்வதற்காக முயற்சித்தவர் என பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி காலத்திலும் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 16 பேர் விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். தற்போதைய ஜனாதிபதியும் அண்மையில் சிலருக்கு விடுதலைக்கு அனுமதி அளித்திருந்தார். இதற்கு இவர்களின் நன்நடத்தையும் ஒரு காரணமாகும்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது நீண்ட காலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு காலகட்டத்திலும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராகவோ, அரசாங்கத்திற்கு எதிராகவோ எதனையும் செய்யவில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலை

நன்னடத்தை மிக்கவர்களாகவே காணப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாகத்திற்கு முன் அறிவிப்பு செய்தே பல்வேறு கால கட்டங்களில் சிறைச்சாலை பொருட்களுக்கோ அல்லது வேறு எதற்குமோ எந்த விதமான சேதங்களையும் ஏற்படுத்தாது அமைதி போராட்டங்களையே நடத்தியுள்ளனர். இப்ப போராட்ட காலத்தில் சிறந்த ஒழுக்க நெறியை கடைப்பிடித்துள்ளனர்.

தொடர்ந்து சிறைச்சாலை நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற்றவர்களாகவே உள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் ஒப்புதல் வாக்கு மூலமே குற்றவாளிகள் ஆக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பவர்களாக உள்ளனர்.

புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பை பெற இலங்கை அரசாங்கத்திற்கு அருட்தந்தை சத்திவேல் வழங்கும் ஆலோசனை | Sl Government Should Release Political Prisoner

இதனை கருத்தில் கொண்டும், தமிழக அரசாங்கத்தை போன்று தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்கு செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்நடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட அரசாங்கம் அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயலும் அரசாங்கம் அம் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளில் ஒன்றானதும் அரசியல் பிரச்சினையோடு நேரடி தொடர்புபட்டதுமான அரசியல் கைதிகளில் விடுதலை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும்.

அதுவே அரசின் மீதான நம்பிக்கைக்கு வழிவகுக்கும். பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கும் இந் நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் இவ்வேளையில் அதற்கு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துணை செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US