முழு நாடும் இருளில் முழ்கும் ஆபத்து! நோயாளிகளை ஏற்க முடியாத நிலையில் வைத்தியசாலைகள் (Video)
”2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு இலங்கைக்கு பெரும்பாலும் அன்னியச் செவாணி அதாவது வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்திருக்க வேண்டும்.
ஆனால் பெருமளவு அன்னியச் செலவாணி வரவில்லை. காரணம் இலங்கை அரசாங்கத்திற்கும், புலம்பெயர் மக்களுக்கும் தொடர்ச்சியாக நிலவும் ஒரு சர்ச்சை, மிகவும் மோசமான கருத்து வேறுபாடு, பிளவு நிலை , கோபங்கள் எல்லாம் அன்னிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்து இலங்கையை தவிர்த்து ஏனைய நாடுகளுக்கு போவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து , சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு அன்னிய முதலீடுகள் சென்றன, ஆனால் இலங்கைக்கு வரவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை, பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்”.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”மேற்குலக்கதில் இருக்கக்கூடிய புலம்பெயர் மக்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் மீது ஒரு கோபம் உள்ளது. காரணம் யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்பு செலவை இலங்கை அரசாங்கம் குறைக்கவில்லை.கடந்த வருடமும் 373 பில்லியனை ஒதுக்கியது. தொடர்ச்சியாக யுத்தம் முடிந்த பின்னரும் பாதுகாப்பு அமைச்சிதான் மிகப்பெரிய அமைச்சியாக இருக்கின்றது.
பிலிப்பைன்ஸ் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு மிகப்பெரிய அமைச்சியாக இருப்பது கல்வி அமைச்சு. யுத்தம் முடிந்த பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கமும் அதனை தவறவிட்டு விட்டார்கள். பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி குறைப்பு செய்ய வில்லை. அதனால் புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு கோபம் இருகிறது. விரக்தி இருகிறது.
அவர்கள் பெருமளவுக்கு முதலீடுகளை இங்கு கொண்டு வராததற்கு காரணம் அந்த இடைவெளி அதனை இலங்கை அரசாங்கம் தீர்ப்பதற்கு முற்படவில்லை. பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து இருக்கலாம், நல்லாட்சி அரசாங்கம் கூட தீர்த்து இருக்கலாம்.
உதாரணமாக கைதிகள் நீண்டகாலமாக இருப்பவர்களை ஒரு நல்லெண்ண அடிப்படையில் விடுவித்திருக்கலாம். காணாமல் போனவர்களின் பிரச்சினையை உடடினயாக தீர்த்து இருக்கலாம். இவை எல்லாம் புலம்பெயர் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது” என இதன்போது தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,