ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தொடர்ந்தும் எதிர்க்கும் இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 46-1 மற்றும் 51-1 தீர்மானங்களை, இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிவிவகார அமைச்சில் கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கான அலுவலகம்
பொருளாதார மீட்சி, சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டில் இலங்கை அடைந்த பல குறிப்பிடத்தக்க சாதனைகளை அமைச்சர் சப்ரி இந்த மாநாட்டின் போது வலியுறுத்தினார்.
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சப்ரி சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விரிவான சட்டத்தை உருவாக்குவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தையும், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றின் முன்னேற்றங்களையும் அவர் கோடிட்டுக்காட்டினார்.





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
