மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு செல்ல தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்
இலங்கை விமானப்படையின் 20 அதிகாரிகள் மற்றும் 88 விமானப்படை வீரர்கள் அடங்கிய விமானப் பிரிவின் மற்றொரு குழு, அமைதி காக்கும் பணிகளுக்காக டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட உள்ளது.
இலங்கை விமானப்படை 2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேசிய திறைசேரிக்கு பெற்றுகொடுக்கின்றது.
இதன்படி மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணிக்காக (MINUSCA) நியமிக்கப்பட்ட விமானப் பிரிவின் எண் 10 குழுவின் பாஸிங் அவுட் அணிவகுப்பு கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் நடைபெற்றது.
விமானப்படைத் தளபதி
10ஆவது படைத் தளபதி குரூப் கப்டன் உதித டி சில்வா தலைமையில் இடம்பெற்ற அணிவகுப்பிற்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச மரியாதை செலுத்தினார்.

மேலும், அணிவகுப்பு உரையின் போது, மத்திய ஆபிரிக்கக் குடியரசில் நிலைகொண்டுள்ள இலங்கை விமானப்படையினரின் துணிச்சல், நிபுணத்துவம் மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பாராட்டியதாக தளபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இராணுவப் படைகள் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது என்றும், இது உலக அரங்கில் தேசத்தின் நிலையை மேம்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பணி நாட்டிற்கு கணிசமான பொருளாதார நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri