புதிய கருத்து கணிப்புகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை: மரிக்கார்
புதிய கருத்து கணிப்புக்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை விடவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும்
இந்த கருத்து கணிப்பின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 39 வீதமான ஆதரவும், தேசிய மக்கள் சக்திக்கு 20 வீதமான ஆதரவும் காணப்படுவதாகவும், 24 வீதமானவர்கள் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் இருக்கும் நபர்களும் வெற்றிபெறும் தரப்பிற்கே ஆதரவு வழங்குவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும் என மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
