கோட்டாவுடன் ஒத்துவராது! சஜித் தீர்மானம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இடைக்கால நிர்வாகத்தை,சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தி, இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் தமது கட்சி இணையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்;.
இதனையடுத்தே சர்வகட்சி அமைச்சரவையில் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்; அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam