ராஜித சேனாரத்னவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! ஐக்கிய மக்கள் சக்தியின் அதிரடி உத்தரவு
தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதேவேளை, சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால் அதனை ஏற்கத் தயார் என அண்மையில் ராஜித சேனாரத்ன தெரிவித்ததாகக் கூறப்படும் அறிக்கை தொடர்பில் ஆராய ஐக்கிய மக்கள் சக்தி குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்னவிடம் விசாரணை
இவ்வாறு நியமிக்கப்பட்ட குழு அண்மையில் கூடிய போது, ராஜித சேனாரத்னவை விசாரணைக்கு அழைத்துள்ளது.
இதன்போது அவர், தான் தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ ஆதரிப்பதாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும், ஊடகங்களால் தனது அறிக்கை திரிபுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
