கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொள்ளுப்பிட்டி, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் உட்பட பலருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் உத்தரவு
இந்த உத்தரவினை கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார்.
இன்றைய தினம் (20.02.2023) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை குறித்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டங்களை தடைசெய்யும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் இன்றைய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவிப்பு
அத்துடன், போராட்டத்தை கைவிடுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை எனவும், தடை உத்தரவு எதையும் நாங்கள் பெறவில்லை என்பதால் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் ரஞ்சித் மதும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை கறுவாத்தோட்டம் பொலிஸ் எல்லைக்குள் உள்ள பல வீதிகளுக்குள், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டக்குழுவினர் நுழைவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
