ரணிலின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய மக்கள் சக்தி!
அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
அம்பாந்தோட்டையில் நேற்றைய தினம் (04.07.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அதன் பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் இணைந்து செயற்படத் தயாரில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அழைப்பு
ஊழல்வாதிகள் உள்ள தற்போதைய அரசைப் பாதுகாப்பதற்குத் தமது அணி தயாரில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் இணையுமாறு சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முன்தினம் (03.07.2023) அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும் தற்போது ஆளும் கட்சியுடன் கைகோர்க்கும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |