ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் குறித்து சரத் பொன்சேகா விமர்சனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும் கட்சியின் தவிசாளருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்க விமர்சனம் முன்வைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்த போது இருந்த கௌரவம், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன் பின்னர் இல்லாமல் போயுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபானம் விநியோகம்
கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் மாவட்டம் முழுவதிலும் மதுபானம் விநியோகம் செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது கட்சி வீழ்ச்சியடைவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri