கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! சபையில் இருந்த த.தே.கூட்டமைப்பு
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் வைபவ ரீதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றைய தினம் (08.02.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்திருந்தார்.
அமர்வு புறக்கணிப்பு
இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர்.
ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "பதவி வெறியர்" என கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்துள்ளனர்.
மேலும், அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே சபையில் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
President walks In to address the house at the 4th session of the 9th parliament. SJB members have boycotted the session, other opposition party members walked out whilst chanting “Rajasena Mania” TNA is the only main party present apart from govt mps pic.twitter.com/MVSULGuiCk
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) February 8, 2023
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam