யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நினைவேந்தல் (Photos)
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் இன்று யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இனப்படுகொலையை நினைவுறுத்தும் சித்திரங்களும் காட்சி படுத்தப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் முன்பாக காய்ச்சப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடரேற்றி ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியால் நினைவுப்பகிர்வு முன்னெடுக்கப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள்ளும் பல்கலையின் வெளியே ராமநாதன் வீதியில் பொதுமக்களுக்கும் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது யாழ். பல்கலைக்கழக சிங்கள தமிழ் மாணவர்களும் ,ஊழியர்கள்,விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நினைவேந்தல் செய்வதற்கு செல்லமுடியாத உறவுகள் நாளை 2.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலில் ஈடுபடலாம் என பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.