நெதர்லாந்திலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கைக்கு சொந்தமான தொல்பொருட்கள்
நெதர்லாந்தில் உள்ள இலங்கை காலனித்துவ கலைப்பொருட்கள் சில விரைவில் திரும்பப் பெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி Lewke இன் பீரங்கி, ஒரு சிங்களக் கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் டிசம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் இரண்டு நாள் நிகழ்வின் போது முறையான கையளிப்பு நடைபெறவுள்ளது.
பொதுமக்களின் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், கலைப்பொருட்கள் மீளப்பெறுதல் மாத்திரமன்றி, கல்வி கற்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்பாடுகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |