பத்து நாட்களுக்கு மூடப்படும் சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதி
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இப்பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலம் அமைப்பதற்காக இந்த வீதி மூடப்படுகிறது.
அறிவிப்புப் பலகைகள்
அதன்படி, இன்று (14) முதல் ஜூன் 24 வரை, 10 நாட்களுக்கு வீதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதி மூடப்பட்டிருக்கும் காலத்தில், வாகன சாரதிகள் நோர்டன் பிரிட்ஜ் சாலை மற்றும் கலுகல, பொல்பிட்டி, லக்சபான வழியாக பிரவேசிக்கும் வாகனங்கள் ஹட்டன் நோர்டன் பிரிட்ஜ் வீதிகளை பயன்படுத்துமாறு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் இது குறித்து பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.
கடுமையான சேதம்
லோனாக் அட்லஸ் பகுதியில், களனி ஆற்றில் பாயும் கால்வாயின் மீது அமைந்துள்ள பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய பாலம் கட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பாலம் மோசமான நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக அது முற்றிலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.








விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
